தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை!

தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை!

எதிர்வரும் 24 ஆம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 
எதிர்வரும் 24 ஆம் திகதி அரசாங்க தரப்புடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற உள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் மேற்கொள்ளல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை கிராம உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ளனர்.
 
இதற்கமைய தற்போது சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image