சுகாதார தொழிற்சங்கங்கள் தென் மாகாண வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் தென் மாகாண வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு

தாதியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று(16) தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

பொருளாதார நீதி தொடர்பில், சுகாதார அமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாகாண மட்டத்திலான பணிப்பகிஷ்கரிப்பை 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த வியாழக்கிழமை வடமத்திய மாகாணத்தில் ஆரம்பித்தன.

இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே பணிப்பகிஷ்கரிப்பிற்கான காரணம் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, இன்று (16) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தென் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிலும் அனைத்து சுகாதார நிலையங்களில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image