கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கை குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கை குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கை குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது, 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றமை தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து ஊடகப் பேச்சாளரால் வெளியிடப்பட்ட அறிக்கை.

கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றமை தொடர்பாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும். இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.   - என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image