அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான அறிவித்தல்

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான அறிவித்தல்
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் சகல அரச ஊழியர்களுக்குமான ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை வழங்கி நிறைவுசெய்வதற்கு எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் சம்பளமும் இதில் உள்ளடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image