உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக W.A.சேபாலிகா சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

W.A.சேபாலிகா சந்திரசேகர, 1993 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் மதிப்பீட்டாளராக இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக அந்நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அவர் இதுவரை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image