வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி, பதாதைகளை காட்சிப்படுத்த தடை

வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி, பதாதைகளை காட்சிப்படுத்த தடை

வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி,  பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை விதித்து  சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகள் கறுப்புக் கொடியை பார்ப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை  ஏற்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தனது சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்  செய்தி அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் நிதி அமைச்சு அறிவித்தல்

நோயாளர்களை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார ஊழியர்களின் பணிக்கு இதனூடாக இடையூறு ஏற்படும் எனவும்  சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார அமைப்புகளின் வளாகத்தினுள் கறுப்புக் கொடி ஏற்றுவதையும் பதாதைகளை காட்சிப்படுத்துவதையும் தவிர்க்குமாறு குறிப்பிட்டு சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image