இந்திய விசா விண்ணப்ப நிலையம் நாளை மீள திறப்பு

இந்திய விசா விண்ணப்ப நிலையம் நாளை மீள திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பிலுள்ள இந்திய விசாவிண்ணப்ப நிலையம், நாளை  (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விசா மற்றும் பிற சேவைகளுக்காக, விசா விண்ணப்ப நிலையம் நாளை முதல் வழமைபோல இயங்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

பெப்ரவரி 15ஆம் திகதியன்று, ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல் காரணமாக, இந்திய விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளைய தினம் விசா விண்ணப்ப நிலையம் மீள திறக்கப்பட உள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image