உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒரு மாத காலத்துக்கு பிற்போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகும் காலத்தை  கருத்திற்கொண்டே இந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த உயர்தரப்பரீட்சையின் முடிவுகளை ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image