1700 ரூபா சம்பள வர்த்தமானிக்கு பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் ஆட்சேபனை

1700 ரூபா சம்பள வர்த்தமானிக்கு பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் ஆட்சேபனை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்காக வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் ஆட்சேபனை வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட குறித்த வர்த்தமானி தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கும் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி தொடர்பில் தமது ஆட்சேபனையை நேற்று (15) தொழில் ஆணையாளரிடம் சமர்ப்பித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

தாம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள உற்பத்திக்கு ஏற்றாற்போன்ற சம்பள அதிகரிப்பை வழங்க தாம் தொடர்ந்தும் தயாராக இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் 

1,700 ரூபா சம்பள வர்த்தமானி: ஆட்சேபனை தெரிவிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

பாரம்பரிய பெருந்தோட்டத் தொழிற்துறைக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத்துறை அவசியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள முறைமை குறித்து அமைச்சர் ஜீவன் கருத்து

ஆசிரியர் நியமனங்களை வழங்குவதில் உள்ள சிக்கல் என்ன? கல்வி அமைச்சர் விளக்கம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image