மீண்டும் கூட்டு ஒப்பந்தம் - 1,500 ரூபா சம்பளத்திற்கு கம்பனிகள் இணக்கம்!

மீண்டும் கூட்டு ஒப்பந்தம் - 1,500 ரூபா சம்பளத்திற்கு கம்பனிகள் இணக்கம்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபா அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பணவாக 150 ரூபா படி 1,500 ரூபா சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்தார். 

அத்துடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

30.07.2024 செவ்வாய்க்கிழமை பொகவந்தலாவை ரொப்கில் தோட்டபகுதியில் 12 வீடுகளும் டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 19 வீடுகளையும் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களான அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் சமூகத்திற்காக 80 வருடங்களுக்கு மேலாக உழைத்தவர்கள் லயன் குடியிருப்பில் இருந்து வந்தவர்கள்தான் செளமியமூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் பாராளுமன்றம் முதல் மாகாண சபை, பிரதேச சபை போன்றவற்றுக்கு அனுமதியை பெற்றுக்கொடுத்தார்கள்.

காங்கிரஸ் உரிமையை பெற்றுக்கொடுத்ததுடன் மாற்று கட்சியினருக்கு அது பிடிக்காமல் விமர்சனம் செய்வார்கள், மக்கள் சேவை செய்யும் போது பல எதிர்ப்புகள் வரும் அதனை உடைத்தெரிந்து முன் செல்ல வேண்டும். தொழிலாளி உழைத்தால் உழைப்புக்கேற்ற சம்பளத்தை பெறவேண்டும் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாட வேண்டும்.

அவ்வாறு கலந்துரையாடி உரிமைகளை பெற்று கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பு மாத்திரமே. பத்தாயிரம் வீடமைப்பு திட்டத்தில் முதற்கட்டமாக 1,300 வீடுகளுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 8,700 வீடுகளும் மலையக மக்களுக்கே அமைத்து கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image