கொட்டகலை டிரேட்டன் பிரிவு தொழிலாளர்கள் போராட்டம்

கொட்டகலை டிரேட்டன் பிரிவு தொழிலாளர்கள் போராட்டம்

கொட்டகலை டிரேட்டன் (மண்வெட்டி) தோட்டத்தின் ஸ்மோல் டிரேட்டன் (சின்ன மண்வெட்டி) பிரிவு தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்டா பிரதேசத்தில் பாதை ஓரத்தில் அமர்ந்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். இவர்கள் பதாதைகளை ஏந்தி நேற்று (03) இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தாம் தின சம்பளத்திற்கு இதுவரை பறித்த 17 கிலோகிராம் தேயிலையை பறிக்க தயாராக உள்ளதாகவும் தமக்கு வாரத்தில் ஆறு நாட்கள் தொழில் வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்தே இந்த போராட்டத்தை  முன்னெடுத்தனர்;

இதில் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் தெரிவிக்கும் போது.,

தமக்கு ரூபா 1000 சம்பளம் கிடைத்து மூன்று மாதங்கள் ஆகியும் தாங்கள் இதுவரை இந்த ரூபா 1000 சம்பளத்தை நிம்மதியாக வாங்கியது இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

பல மாத போராட்டங்களின் பின்னர் தாம் பெற்றுக் கொண்ட இந்த சம்பளத்தை தமக்கு நிம்மதியாக பெற்றுக் கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை தாம் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமக்கு கொடுக்கப்பட்ட இந்த சம்பள உயர்வுக்கு நிகராக தம்மை மேலதிகமாக கொழுந்து பறிக்க சொல்லி முகாமை தம்மை நிர்ப்பந்திப்பதாக தெரிவிக்கின்றனர். தாம் இதுவரை தின சம்பளத்திற்கு 17 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறித்ததாகவும் தற்போது தம்மை 20 கிலோகிராம் தேயிலை பறிக்க நிர்ப்பந்திப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் தினமும் மேலதிகமாக 6 கிலோகிராம் தேயிலை பறிப்பதாகவும் அது நிறையின் போது நீர் என்று கூறி தம்மிடம் பிடிக்கப்படுவதாகவும் இவர்கள் கேட்பது போல் தாம் தினமும் 26 கிலோகிராம் தேயிலை பறிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்

தேயிலை மலையில் கொழுந்து இல்லாத காரணத்தினால் தம்மால் இவ்வளவு தொகையான தேயிலையை பறிப்பது சிரமம் என்று இவர்கள் தெரவித்தனர்.

நாம் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பு மற்றும் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில் வெளி தொழிலாளர்களை பயன்படுத்தி கொழுந்து பறிக்கப்படுவதால் தாம் மண்ணை தான் சாப்பிடவேண்டி வரும் என்று தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணித்தியால கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் இவர்கள் கலைந்து சென்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image