பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
All Stories
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நுவரெலியா உடபுசல்லாவை - Court Lodge தோட்டத்திற்கு நேற்று (16) காலை கள விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, Court Lodge தோட்டத் தொழிலாளர்களுடன் சம்பள விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்.
யாழ். நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகள் எவ்வாறு தான்தோன்றித்தனமாகவும், தன்னிச்சையாகவும் செயற்படுகின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையம் முன்னால் கறுப்புப்பட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளது.நாளை வௌ்ளிக்கிழமை (19) காலை 9 மணியளவில் இப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.
நாடளாவிய ரீதியில் 20,000 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொழிலாளர் திணைக்களத்திற்கு பதிவுக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளதாக அந்த சம்மேளனத்தின் பிரதானிகள், அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர்.