நாடு திரும்புவோரிடமிருந்து தனிமைப்படுத்தல், பிசிஆர் பணம் கொள்ளையடிக்கப்படுகிறதா?

நாடு திரும்புவோரிடமிருந்து தனிமைப்படுத்தல், பிசிஆர் பணம் கொள்ளையடிக்கப்படுகிறதா?

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனை என்ற போர்வையில் அதிக பணம் பறிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விரைவில் கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த செய்திகள் உண்மையா என்று ஆராயப்பட்டு அவ்வாறு உண்மையாக இருப்பின் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் கவனமெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் அறிவுறுத்தியுள்ளார் என்றும் இத்தவறுகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு பின் நிற்கப்போவதில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக விசேட வைத்திய நிபுணர்களுடன் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகங்களை கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image