எமது பெருந்தோட்ட தேயிலை தோட்ட காணிகளை சூரையாட விடமாட்டோம். - அ.லோரன்ஸ்

எமது பெருந்தோட்ட தேயிலை தோட்ட காணிகளை சூரையாட விடமாட்டோம். -  அ.லோரன்ஸ்

எமது பெருந்தோட்ட தேயிலை தோட்ட காணிகளை சூரையாட விடமாட்டோம். - அ.லோரன்ஸ்

பால் உற்பத்தி என்ற போர்வையில் எமது தேயிலை காணிகளை சூறையாட அரசாங்கம் எத்தனித்து வருகின்றது. இதற்கு பின்புலத்தில்; அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையக கட்சிகளும் சூட்சுமமான முறையில் பச்சைக்கொடி காட்டி வருகின்றன என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் அ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாட்களும் எம் சமூகம் மாடாக தேய்ந்து காடாக கிடந்த நிலத்தை களனியக மாற்றியுள்ளது. இதனை அரசாங்கம் பால் உற்பத்தி என்ற போர்வையில் தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்க இடமளிக்க கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வௌியிட்ட அவர், எத்தனையோ மலையக இளைஞர்கள் கால்நடைகளை வளர்க்க ஆர்வத்துடன் முயன்று கொண்டிருக்கின்றனர். கொரோனா கோர தாண்டவத்தால் பல இளைஞர்கள் தொழில் வாய்ப்பின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் கடனடிப்படையிலோ அல்லது வேறெதாவது வழியிலியோ கால்நடைகளை வழங்கும் பட்சத்தில் எம் இளைஞர்களின் பொருளாதாரமும் அதே நேரத்தில் பால் உற்பத்திகளையும் நாட்டில் அதிகரிக்க முடியும்.

நாட்டின் முதுகெழும்பாக விளங்கும் எம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை போல பால் உற்பத்தியிலும் பால் சார்ந்த பொருட்களின் தட்டுபாட்டை நீக்கும் முதுகெழும்பு சக்தியாகவும் எம் சமூகம் மாறும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

அதை விடுத்து தனியாருக்கு நிலங்களையும் நிலம் சார்ந்த இயற்கை வளங்களையும் சேர்த்து தாரைவார்த்து கொடுக்க நினைக்கும் இவ் அரசாங்கத்தையும் அதற்கு துணை போகும் நமது சமூக அரசியல் பிரதிநிதிகளையும் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

மூடுவிழா கண்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை இனங்கண்டு பால் உற்பத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பியுங்கள் அல்லது இதன் பொறுப்பை எம் இளைஞர்களிடம் ஒப்படையுங்கள் என மலையக மக்கள் முன்னணி பிரதி தலைவர் அ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image