நூற்றாண்டு விழா காணும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்!

நூற்றாண்டு விழா காணும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்!

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் நூறாவது ஆண்டு விழா இம்மாதம் 6ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்க தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன உட்பட பல தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

1920 தொடக்கம் 2020ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆசியாவில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முதலாவது சங்கம் என்ற பெருமையினை தோட்ட சேவையாளர் சங்கம் தனதாக்கிக்கொண்டுள்ளது.

நாட்டின் அசாதாரண நிலைமையினைக் கருத்திற்கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்களே இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். எனவே ரூபவாஹினி, பியோ டிவி, CESU today முகப்புத்தக கணக்கு என்பவற்றினூடாக இந்நிகழ்வை நேரடியாக கண்டுகளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ். சந்திரமதன் வேலைத்தளத்திற்கு தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image